சினிமா செய்திகள்
மீண்டும் ரூ.500 கோடி பட்ஜெட்டில் ஒரு ராஜமெளலி படம்: படப்பிடிப்பு எங்கே தெரியுமா?
இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலிக்கு ரூ.500 கோடி பட்ஜெட்டுக்கு குறைவாக படமே எடுக்க தெரியாதா என்ற கேள்வி எழுப்பும் வகையில் அவரது பாகுபலி, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர் ஆகிய மூன்று படங்களுமே 500 கோடி பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராஜமௌலியின் அடுத்த படத்தின் பட்ஜெட் ரூ 500 கோடி என்று கூறப்படுகிறது. எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கப்பட உள்ளது .
இந்த படத்திற்காக ஆப்பிரிக்கா காடுகளிலும் அமேசான் காடுகளிலும் லொகேஷன் பார்த்து விட்டு வந்ததாகவும் காடுகளில் தான் இந்த படத்தின் பெரும்பாலான பகுதிகள் படமாக்கப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தில் இரண்டு நாயகிகள் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை முடிக்கும் வேலையில் எஸ்.எஸ்.ராஜமௌலி இருப்பதாகவும் இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.