Connect with us

உலகம்

தாய்-தந்தையை கொலை செய்தவர்களை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.290 கோடி பரிசு: கோடீஸ்வர இளைஞர் அறிவிப்பு

Published

on

தனது தாய் மற்றும் தந்தையை கொலை செய்தவர்களை கண்டுபிடித்துக் கொடுத்தால் 35 மில்லியன் டாலர் பரிசு கொடுப்பதாக கோடீஸ்வர இளைஞர் ஒருவர் அறிவித்துள்ளார். இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் 290 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவைச் சேர்ந்த கோடீஸ்வர தம்பதிகள் திடீரென தங்கள் வீட்டில் மர்மமான முறையில் மரணமடைந்து இருந்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த கொடூர சம்பவத்தில் தம்பதிகளின் கழுத்தில் பெல்ட் இறுக்கப்பட்டு கொலை செய்யபட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

முதலில் இது தற்கொலை என்ற முறையில் போலீசார் விசாரித்து வந்த நிலையில் குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாக தற்போது கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோடீஸ்வர தம்பதியின் ஒரே மகனான ஜோனாடன் ஷெர்மன் என்பவர் மக்களிடம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது தந்தை தாய் இருவரும் கொலை செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிறது என்றும் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என்றும் கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்தும் வரை எனக்கு தூக்கம் இருக்காது என்றும் கூறியுள்ளார்.

எனவே கொலையாளிகளை கண்டுபிடிக்க உதவி செய்தால் அவர்களுக்கு 35 மில்லியன் டாலர் பரிசு தருவதாகவும் இந்த கட்டணத்தை நான் செலுத்தும் நாள் மிக விரைவில் வரும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு கனடா மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு சிறு துப்பு கொடுத்தால்கூட தகவல் கொடுப்பவர்களுக்கு மில்லியன் கணக்கில் பரிசு கொடுக்கப்படும் என்ற இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?