Connect with us

சினிமா செய்திகள்

எஸ்.ஜே சூர்யா உடன் ஜோடி சேர்ந்த யாஷிகா ஆனந்த்..!- பூஜையுடன் தொடங்கி வைத்த அமைச்சர்!

Published

on

இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் புது படம் ஒன்றில் நாயகியாகக் கமிட் ஆகியுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 2 மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்ததில் இருந்து பெரிதாக எந்த வாய்ப்பும் யாஷிகாவுக்குக் கிடைக்கவில்லை. சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பெரிய பேனரின் கீழ் நடிக்க யாஷிகாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக கதாநாயகியாக யாஷிகா இணைந்துள்ள படத்தின் பெயர் கடமையைச் செய். முத்தின கத்திரிக்காய் என்ற படத்தை இயக்கிய வெங்கட் ராகவன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படம் நிச்சயம் முத்தின கத்திரிக்காய் இரண்டாம் பாகம் ஆகத் தான் இருக்கும் என சமுக வலைதளங்களில் ஏற்கெனவே நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

எஸ்.ஜே.சூர்யா கடைசியாக மான்ஸ்டர் என்னும் வெற்றிப் படத்தைக் கொடுத்திருந்தார். இவரது நடிப்பில் அடுத்தடுத்து நெஞ்சம் மறப்பதில்லை, மாநாடு, உயர்ந்த மனிதன், பொம்மை ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு வர உள்ளன. யாஷிகா ஆனந்த் தற்போது நடிகர் மஹத் உடன் ஒரு ‘இவன் தான் உத்தமன்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இன்று தொடங்கி உள்ள ‘கடமையைச் செய்’ படத்தின் படப்பிடிப்பை தமிழக செய்தி மற்றும் விளம்பரப் பிரிவுத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?