சினிமா செய்திகள்
எஸ்.ஜே சூர்யா உடன் ஜோடி சேர்ந்த யாஷிகா ஆனந்த்..!- பூஜையுடன் தொடங்கி வைத்த அமைச்சர்!
இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் புது படம் ஒன்றில் நாயகியாகக் கமிட் ஆகியுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 2 மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்ததில் இருந்து பெரிதாக எந்த வாய்ப்பும் யாஷிகாவுக்குக் கிடைக்கவில்லை. சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பெரிய பேனரின் கீழ் நடிக்க யாஷிகாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக கதாநாயகியாக யாஷிகா இணைந்துள்ள படத்தின் பெயர் கடமையைச் செய். முத்தின கத்திரிக்காய் என்ற படத்தை இயக்கிய வெங்கட் ராகவன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படம் நிச்சயம் முத்தின கத்திரிக்காய் இரண்டாம் பாகம் ஆகத் தான் இருக்கும் என சமுக வலைதளங்களில் ஏற்கெனவே நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
எஸ்.ஜே.சூர்யா கடைசியாக மான்ஸ்டர் என்னும் வெற்றிப் படத்தைக் கொடுத்திருந்தார். இவரது நடிப்பில் அடுத்தடுத்து நெஞ்சம் மறப்பதில்லை, மாநாடு, உயர்ந்த மனிதன், பொம்மை ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு வர உள்ளன. யாஷிகா ஆனந்த் தற்போது நடிகர் மஹத் உடன் ஒரு ‘இவன் தான் உத்தமன்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
இன்று தொடங்கி உள்ள ‘கடமையைச் செய்’ படத்தின் படப்பிடிப்பை தமிழக செய்தி மற்றும் விளம்பரப் பிரிவுத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார்.
New movie starring @iam_SJSuryah & @iamyashikaanand, titled #KadamaiyaiSei
Launched today in the presence of TN minster @Kadamburrajuofl, with a pooja
Directed by Venkat Raghavan @Pro_Bhuvan pic.twitter.com/Q38cTtUvAM
— Kaushik LM (@LMKMovieManiac) February 1, 2021