சினிமா செய்திகள்
‘தற்கொலை எண்ணங்களால் தவித்தேன்’- மீண்டு வந்த நடிகை நமீதா உருக்கம்!
‘தற்கொலை எண்ணங்களால் தவித்தேன்’ என நடிகை நமீதா தனது இருண்ட காலத்தில் இருந்து மீண்டு வந்ததை உருக்கமாகப் பதிவு செய்துள்ளார்.
நடிகை நமீதா கடந்த 2004-ம் ஆண்டு விஜயகாந்த் ஜோடியாக எங்கள் அண்ணா படத்தில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சில காலங்கள் நாயகியாக நடித்து வந்தவருக்கும் கொஞ்ச கொஞ்சமாகப் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. அதன் பின்னர் நீண்ட இடைவெளியில் அவ்வப்போது தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வந்தார். பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சி மூலம் மீண்டும் கம் பேக் கொடுத்தார்.
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த உடனே தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்ட்டு விசாகப்பட்டிணத்தில் செட்டில் ஆன நமீதா தற்போது மீண்டும் பொது வெளியில் தலை காட்டியுள்ளார். இந்த இடைவெளி குறித்த நமீதா கூறுகையில், “சினிமா வாய்ப்புகள் சரியாகக் கிடைக்காத போது தான் நான் உடல் நலம் இல்லாமல் இருந்தேன். தைராய்டு போன்ற பிரச்னைகளால் ரொம்ப குண்டாகினேன். குண்டானதை என்னால் குறைக்க முடியாத நிலை ஏற்பட்ட போது மன அழுத்தம் ஏற்பட்டது.
மன அழுத்ததை திசை திருப்ப அதிகமாக சாப்பிடத் தொடங்கினேன். அது இன்னும் கூடுதல் எடையைக் கொடுத்தது. அந்த சமயங்களில் அதிக மன அழுத்தத்தால் தற்கொலை எண்ணங்கள் அதிகமாகத் தோன்றின. ஆனால், கிருஷ்ணர் வழிபாடு, தியானம் என என்னை திசை திருப்பிய போது நம்பிக்கை வாந்து உடல் நலத்தில் கவனம் செலுத்தினேன். அது தான் என்னுடைய எடை குறைவுக்குக் காரணம். இப்போ தினமும் உடற்பயிற்சி, தியானம் என என்னை நானே வலுப்படுத்தி வருகிறேன்” எனக் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.