சினிமா செய்திகள்
எஸ்.ஜே.சூர்யா மீது சிவகார்த்திகேயனுக்கு பொறாமையா? பொய் சொல்வதற்கு ஒரு அளவு வேண்டாமா?
எஸ் ஜே சூர்யா மீது சிவகார்த்திகேயனுக்கு பொறாமை என்றும் அதனால் தான் டான் படத்தின் போஸ்டர்களில் எஸ்ஜே சூர்யா படம் வராமல் பார்த்துக் கொள்ளும்படியும் கூறியிருப்பதாகவும் ஒரு சிலர் வேண்டுமென்றே வதந்தி கிளப்பி வருவதற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகை பொறுத்தவரை ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகிய நான்கு நடிகர்களுக்கு பிறகு வசூல் சக்கரவர்த்தி நடிகராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். அவருடைய இடத்தை இன்னும் சூர்யா, தனுஷ் கூட தொடவில்லை என்பது தான் உண்மை.
அப்படி இருக்கும்போது வில்லன் மற்றும் குணசித்திர கேரக்டர்களில் நடித்து வரும் எஸ்ஜே சூர்யா தன்னை விட தன் படத்தில் புகழை பெற்று விடுவார் என்றும் எஸ்ஜே சூர்யாவுக்கு சிவகார்த்திகேயனை விட அதிக ரசிகர்கள் கூட்டம் இருப்பதாகவும் ஒரு கும்பல் வேண்டும் என்று புரளியைக் கிளப்பி வருகிறது .
தங்களைத் தாங்களே பத்திரிக்கையாளர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் அந்த கூட்டம், டான் படத்தில் எஸ் ஜே சூர்யாவை விளம்பரப்படுத்த வேண்டாம் என சிவகார்த்திகேயன் கூறியதாக வதந்தி பரப்பி வருகிறது.
சிவகார்த்திகேயன் தான் நடிக்கும் திரைப்படத்தில் நடிக்கும் அனைவரையும் சமமாக கருதி நடத்திவருகிறார் என்பது அவருடைய படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் தெரியும். அவ்வாறு இருக்கும்போது சிவகார்த்திகேயன் மீது கொண்ட தனிப்பட்ட பகை காரணமாக ஒரு கும்பல் தேவையில்லாமல் வதந்தியை கிளப்பி வருவதாகவும் அதனை நம்பி பல ஊடகங்கள் அதை செய்தியாக வெளியிட்டு வருவதாகவும் சிவகார்த்திகேயன் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.
எஸ்ஜே சூர்யாவும் சிவகார்த்திகேயனும் நெருங்கிய நண்பர்கள் என்றும் படப்பிடிப்பின்போது இருவரும் கலகலப்பாக இருந்தார்கள் என்றும் அந்த நட்பு இன்றும் தொடர்ந்து வருகிறது என்றும் அந்த கும்பல் கூறியது முழுக்க முழுக்க வதந்தி என்றும் சிவகார்த்தியன் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.