சினிமா செய்திகள்
பூர்வீக கிராமத்தில் புதுவீடு கட்டிய சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சென்னையில் ஏற்கனவே சொந்த வீடு இருக்கும் நிலையில் தனது பூர்விக கிராமத்தில் சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாமே திருச்சி என்றாலும் அவருடைய முன்னோர்கள் பிறந்து வளர்ந்த ஊர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவிழிமிழலை என்பது குறிப்பிடத்தக்கது.
புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்களான சுப்பிரமணியம் பிள்ளை, நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இருவரும் சிவகார்த்திகேயனின் கொள்ளுத் தாத்தாக்கள் என்ற தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இணையதளங்கள் மூலம் தெரியவந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் தனது பூர்வீக கிராமத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன் தனது உறவினர்களை சந்தித்து பேசிய புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலானது.
இந்த நிலையில் தற்போது தனது பூர்விக கிராமத்தில் சிவகார்த்திகேயன் புது வீடு கட்டி புதுமனை விழாவை பிரமாண்டமாக நடத்தி உள்ளார். இந்த விழாவில் தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே அவர் அழைத்ததாகவும் சினிமா பிரபலங்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்த புதுமனை புகுவிழாவின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.