சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடி அளித்தாரா கமல்ஹாசன்?
தன்னுடைய தயாரிப்பில் நடிக்க கமிட்டான சிவகார்த்திகேயனுக்கு கமல்ஹாசன் நெருக்கடி கொடுத்து வருவதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது.
உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படம் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில் தற்போது கமல்ஹாசன் சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளதாக தெரிகிறது. டான், அயலான் மற்றும் எஸ்கே 20 ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து விட்டதை அடுத்து தனது படத்தில் நடிக்க வருமாறு சிவகார்த்திகேயனுக்கு அவர் அழைப்பு விடுப்பதாகவும் ஆனால் ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஒருசில கமிட்மெண்ட் இருப்பதாக சிவகார்த்திகேயன் கூறியதாகவும் தெரிகிறது.
ஆனால் தன்னுடைய படத்தை முடித்து விட்டு மற்ற படங்களுக்கு செல்லலாம் என்று இந்த படத்தின் வியாபாரம் முடிந்து விட்டதாகவும் கூறி கமல்ஹாசன் நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது.
இதனை அடுத்து கமல்ஹாசன் மீது வைத்திருந்த மதிப்பு மற்றும் மரியாதை காரணமாக சிவகார்த்திகேயன் மற்ற கமிட்மெண்ட்களை ஒத்திவைத்துவிட்டு கமல் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.