Connect with us

இந்தியா

பட்ஜெட்டில் இந்த 7 முக்கிய அம்சங்கள் உள்ளது: அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Published

on

இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் ஏழு முக்கிய அம்சங்கள் உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. சற்றுமுன் மத்திய பட்ஜெட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து தற்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.

முதல் கட்டமாக அவர் ஏழு முக்கிய அம்சங்களை இந்த பட்ஜெட் உள்ளடக்கி உள்ளது என்று தெரிவித்துள்ளார். அவை ஒருங்கிணைந்த வளர்ச்சி, உள்கடமைப்பு மற்றும் முதலீடு, பசுமை வளர்ச்சி, இளைஞர் சக்தி, நிதி துறை சார்ந்த அறிவிப்புகள் ஆகியவை இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ஊரகப்பகுதிகளில் இருக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கத்துக்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்த உள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

மேலும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் திட்டமாகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தனிநபர் வருமானம் இந்தியாவில் உயர்ந்துள்ளதாகவும், ரூ. 1.97 லட்சம் ஆக தனிநபர் வருமானம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் முறையில் விவசாயத்திற்கு பொதுக்குழு கட்டமைப்பு வசதி உருவாக்கப்படும் என்றும் விவசாயம் மேம்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் பழங்களுடையினார் மேம்பாட்டிற்காக 15,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 157 புதிய செவிலியர் கல்லூரிகள் உருவாக்கப்படும் என்றும் தற்போது உள்ள கல்லூரிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து தரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் உள்ள கூட்டுறவு சங்கங்களை ஒருங்கிணைத்து பயன்படுத்த புதிய கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் சிறுதானிய உற்பத்தி மையமாக மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறுதானியங்கள் ஆராய்ச்சிக்காக ஹைதராபாத்தில் தனி நிறுவனம் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் வேளாண் துறைக்கு 20 லட்சம் கோடி கடன் இலக்க்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கூறிய அவர் மேலும் சில முக்கிய அம்சங்களை தெரிவித்து வருகிறார். இன்னும் என்னென்ன முக்கிய அம்சங்கள் வெளியாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?