Connect with us

ஆரோக்கியம்

சீரகத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

Published

on

உணவுகளில் சீரகம் தனித்துவ சுவை மற்றும் நறுமணத்தை அளிக்க கூடியது. மலச்சிக்கலுக்கு ஒரு சிறந்த மருந்தாக இருப்பதுடன், குடலில் ஜீரணிக்காத நச்சுக்களை நீக்கி செரிமான பிரச்சனைகளை தவிர்க்கிறது. சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வர, சீரகத்தை வைட்டமின் சி உள்ளதால் தூக்கமின்மை பிரச்சனையும் நீங்கும். ஆனால் இதை அதிகம் சாப்பிட்டாலும ஆபத்து என்பது குறிப்பிடத்தக்கது.

தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுக்கு மிகவும் நல்லது. அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். வயிற்று வலிக்கும் தீர்வு தரும். கர்ப்பிணி பெண்களும் சீரக நீர் பருகலாம். அது கர்ப்பகாலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்திற்கு தேவையான நொதிகளைத் தூண்டும். பால் சுரப்பையும் ஊக்குவிக்கும்.

மாதவிடாய் தள்ளிப்போகிறது என்றாலோ, பிசிஓடி எனும் சினைப்பை நீர்க்கட்டிகள் பிரச்சினையால் அவதிப்பட்டாலோ, கருஞ்சீரகடத்தை நன்றாக அரைத்து பொடித்து, அதை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து, 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர பிரச்சினை சரியாகும். கருஞ்சீரகம் உடலில் ஏற்படும் வலியை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மழை மற்றும பனி காலங்களில் உடலுக்கு தேவையான வெப்பதை கொடுக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். இது சுவாச கட்டமைப்புக்கு நன்மை சேர்த்து, சளியை குணப்படுத்தும். மேலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகுக்கவும், நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் உதவி செய்கிறது. அசிடிட்டியையும் குணமாக்கும். ஆனால், தினசரி சீரகம் சாப்பிட்டால் வயிறு உப்புசம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இரும்பு சத்து குறைபாட்டையும் சீரக நீர் சீர் செய்யும். மாதவிடாய் காலத்தில் வலி நிவாரணியாகவும் விளங்குகிறது. அந்த சமயத்தில் சீரக நீர் பருகுவதன் மூலம் வலி கட்டுப்படும். சரும பளபளப்புக்கும் சீரக நீரை பயன்படுத்தலாம். அதில் பொட்டாசியம் மட்டுமின்றி கால்சியம், செலினியம், மாங்கனீஸ் உள்ளிட்டவை இருக்கின்றன. அவை தோலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.

மருத்துவக் குணங்கள்:

* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிற்றுப் பொருமல் வற்றி நலம் பயக்கும்.

* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய அரைத்து எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால் குடல் கோளாறுகள் குணமாகும்.

* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும்.

* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய அரைத்து பசும்பாலில் கலந்து குடித்து வர நல்ல பலன் கிடக்கும்.

* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.

* சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.

* கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட்டால் தொடர் விக்கல் விலகும்.

* மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

* தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து சீரகக் குடிநீர் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை நாள் முழுவதும் அவ்வப்போது பருகி வர எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் இந்தச் சீரக நீரூக்கு உண்டு.

* சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.

* சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே வாரம் ஒருமுறை தடுப்பு முறையாகக் கூட இதைச் சாப்பிடலாம்.

* உடலுக்கு குளிர்ச்சியும் தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.

* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடியைச் சேர்த்து பருகினால் ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால் கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டியை பொடித்து சாப்பிட்டால் மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.

* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம் தினம் இரண்டு வேளையாக சாப்பிட்டால் உடல் அசதி நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

* சீரகத்தை லேசாக வறுத்து அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்பெறும், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

10 நவம்பர் 2025 தமிழ் பஞ்சாங்கம்: நல்ல நேரம், ராகு காலம், யமகண்டம் மற்றும் இன்று சிறப்பான யோகம் விவரங்கள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

நவம்பர் 7, 2025 தசாங்க ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்கள் பெறும் அதிர்ஷ்ட நன்மைகள்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

நவம்பர் 16 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 ராசிக்காரர்கள் பெறும் அதிர்ஷ்ட நிதி பலன்கள்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கேரட் ஜூஸில் இதைச் சேர்த்து குடித்தால் கிடைக்கும் அசரீர நன்மைகள்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்படுபவர்கள் யார்? இந்த 4 ராசிக்காரர்கள் எங்குச் சென்றாலும் மரியாதை பெறுவார்கள்!

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

உடல் எடை குறைக்க ரவை நல்லதா? முழு கோதுமை மாவா? — நிபுணர்கள் கூறும் உண்மை!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

18 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் ராகு-சுக்கிர நவபஞ்சம ராஜயோகம்: பண மழையில் நனையும் இந்த மூன்று ராசிக்காரர்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

1 மாதம் கெடாமல் இருக்கும் கார சட்னி ரெசிபி – இட்லி, தோசை, சாதத்துக்கும் பொருத்தமான சுவை!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

அனுஷ நட்சத்திரத்தில் புதன் சஞ்சாரம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மிளிரும் காலம்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 30% சம்பள உயர்வு? போனஸ், கிராச்சுவிட்டி, ஓய்வூதியத்தில் பெரும் நன்மைகள்!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய மாற்றம்: ஊதிய உச்சவரம்பு ரூ.15,000 இலிருந்து ரூ.25,000 ஆக உயரவுள்ளது – கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு நன்மை!

வணிகம்6 நாட்கள் ago

ரிசர்வ் வங்கியின் புதிய நகை கடன் விதிகள்: தங்கத்துடன் வெள்ளியையும் அடமானம் வைத்து கடன் பெறலாம்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் நன்மைகள் – சம்பள உயர்வோடு ஓய்வூதிய மாற்றங்களும்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 03 நவம்பர் 2025: இன்று நன்னேரம், ராகு காலம், யமகண்டம் மற்றும் திதி விவரங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 12% அல்ல 186% வரையிலும் சம்பள உயர்வு? முழு விளக்கம் இங்கே!

செய்திகள்7 நாட்கள் ago

bet365 bonus password NYPBET: Choice $5, get $2 hundred in the extra wagers winnings or lose to have Tigers against Guardians

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

இந்திய ரயில்வேயில் 2,569 பணியிடங்கள் – டிப்ளமோ & பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு!

இந்தியா5 நாட்கள் ago

அசைவ உணவு தடை செய்யப்பட்ட உலகின் முதல் நகரம் – குஜராத்தின் புனித நகரமான பாலிதானாவின் சிறப்புகள்!

செய்திகள்7 நாட்கள் ago

Boylesports British Sportsbook & Gambling establishment Opinion 2025 Would it be Safe?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 750 வங்கி அதிகாரி வேலை வாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

Translate »