சினிமா செய்திகள்
நடிகை சாரா அலி கானுக்கு மூக்கில் பலத்த அடி… அம்மா- அப்பா பேச்சை கேட்காததற்கு மன்னிப்பு
பாலிவுட் நடிகை சாரா அலி கான் இன்று படப்பிடிப்பில் இருக்கும் போது அடிபட்டதில் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகை சாரா அலி கான் தற்போது ஆக்ஷன் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பெண் கமாண்டோவாக நடிக்கிறார் சாரா. அதிகப்படியான சண்டைக் காட்சிகள் இருப்பதால் சாராவின் தந்தை நடிகர் சயிஃப் அலி கான் மற்றும் தாய் நடிகை அம்ரிதா சிங் ஆகிய இருவரும் அந்தப் படத்தில் சாரா நடிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆனால், சண்டைக் காட்சிகளில் நடிக்க ஆர்வம் இருப்பதால் அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு படப்பிடிப்புகளிலும் கலந்து வருகிறார் சாரா. இன்று அசாம் மாநிலத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது ஒரு சண்டைக் காட்சியின் போது சாராவின் மூக்கு உடைந்தது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் மூக்கில் ப்ளாஸ்திரி ஒட்டிக்கொண்டு இந்தத் தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நடிகை சாரா அலி கான் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தனது தாய்- தந்தையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.
View this post on Instagram