Connect with us

தமிழ்நாடு

ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் வங்கிகளுக்கு அபராதம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Published

on

ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ள வசதியாக ஏடிஎம்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவசர தேவைக்கு பணம் எடுக்க ஏடிஎம் செல்லும் போது சில சமயம் ஏடிஎம்களில் பணம் இல்லாத காரணத்தினாலும், தொழில்நுட்ப கோளாறு காரணத்தினாலும் பணம் எடுக்க முடியாத நிலை வாடிக்கையாளருக்கு ஏற்படுகிறது.

இதனால் தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியவில்லை என்ற ஆதங்கம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு முடிவு கொண்டுவர ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த விதி அக்டோபர் 1-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரவிருப்பதாகவும் ஒரு மாதத்தில் ஏடிஎம் இயந்திரம் மொத்தமாக பத்து மணி நேரம் பணம் இல்லாமல் இருந்தால் ரிசர்வ் வங்கி சம்பந்தப்பட்ட வங்கி அபராதம் விதிக்கும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது.

ஏடிஎம்களில் பணம் இல்லாமல் போவதால் அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அனைத்து வங்கிகளும் தாங்கள் பராமரித்து வரும் ஏடிஎம்களில் சரியான நேரத்தில் பணத்தை நிரப்ப வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து இனி அனைத்து ஏடிஎம்களும் முறையாக பராமரிக்கப்பட்டு பணம் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம்4 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?