Connect with us

இந்தியா

அதானி-ஹிண்டன்பர்க் விளைவு? இந்தியாவின் 20 பெரிய வணிகங்களை கண்காணிக்கும் ரிசர்வ் வங்கி..!

Published

on

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதானி நிறுவனம் குறித்து அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பங்குச்சந்தையில் பெரும் சரிவை ஏற்படுத்திய நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்த ஏராளமானோர் லட்சக்கணக்கான பணத்தை இழந்தனர் என்பதும் தெரிந்ததே. ஹிண்டன்பர்க் நிறுவனம் தனது சுயநலத்திற்காகவும் சுய லாபத்திற்காகவும் அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தி அறிக்கையை வெளியிட்டு மிகப்பெரிய லாபத்தை பார்த்தது என்றாலும் அதானி நிறுவனத்திலும் சில பிரச்சனைகள் இருந்தது என்பது அந்த அறிக்கையின் மூலம் பலருக்கு தெரிய வந்தது.

இதனை அடுத்து இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் செபி இது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்தது என்பது தற்போது சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக குழு அமைக்கப்பட்டு அதானி ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

#image_title

இந்த நிலையில் அதானி ஹிண்டன்பர்க் நிகழ்வு போன்று மீண்டும் ஒரு நிகழ்வு நடக்காமல் இருப்பதற்காக நிதி அபாயங்களை முன்கூட்டியே கண்டறிவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி அதானி நிறுவனம் போன்ற இருக்கும் 20 பெரிய நிறுவனங்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் இந்த நிறுவனங்களின் மிகப்பெரிய கடன்கள் குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நிதி நிலையை சரியாக கையாளவில்லை என்றால் எப்போது வேண்டுமானாலும் திவால் ஆகலாம் என்ற நிலையில் இருக்கும் நிறுவனங்களை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு நிறுவனத்திற்கு கடன்கள் எந்த அளவுக்கு பொருளாதாரத்திற்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு ஆபத்தும் கூட என்பதும் இது இருமுனை கத்தி போன்றது என்றும் கூறப்படுவது உண்டு.

கடன் வாங்கிய நிறுவனங்கள் அந்த கடன் தொகையை சரியாக பயன்படுத்தி தொழிலை வளர்த்து, வளர்ச்சி அடைந்தால் கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் கடன் வாங்கும் பெரும்பாலான நிறுவனங்கள் நிதிநிலையை சரியாக கையாளாகாமல் தோல்வி அடைந்து வருவதால் தான் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அபாயம் ஏற்படுகிறது.

#image_title

இதனை தடுப்பதற்காக ரிசர்வ் வங்கி தற்போது தனது கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் உள்ள 20 பெரிய நிறுவனங்கள் அதிக அளவில் கடன் வாங்கி உள்ள நிலையில் அந்த நிறுவனங்களில் நிறுவனங்களின் கடன்கள், லாபம், வருவாய், கடனை திருப்பி செலுத்தும் முறை, பத்திரங்கள் மூலமாக பெற்ற கடன்கள், பங்கு அடமான கடன்கள் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி கூர்ந்து கவனித்து வருவதாகவும் நாட்டின் நிதி நிலையை பாதுகாக்கும் வகையில் ரிசர்வ் வங்கி இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் தேவைப்படும்போது இந்த 20 நிறுவனங்களின் மீது தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் என்றும் நிறுவனங்களுக்கு சில அழுத்தத்தை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

சினிமா செய்திகள்25 mins ago

தொடங்கப்படாத தனுஷ் படம்; அதற்குள் நீக்கப்பட்ட நடிகர்!

கிரிக்கெட்1 hour ago

ஐபிஎல் 2023: 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி!

Rajinikanth
சினிமா செய்திகள்2 hours ago

‘செம தலைவா’ மகள் சொன்ன கமெண்ட்; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினிகாந்த்!

Kamal Haasan flew to Taiwan; Viral photo!
சினிமா செய்திகள்2 hours ago

தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!

சினிமா4 hours ago

திட்டமிட்டபடி வெளியாகும் ‘ஜவான்’!

தமிழ்நாடு6 hours ago

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

Uncategorized6 hours ago

தமிழகத்தில் உள்ள குடும்பங்களுக்கு அதிவேக இணைய சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!

தமிழ்நாடு8 hours ago

தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்: சட்டசபையில் அமைச்சர் தகவல்!

இந்தியா10 hours ago

அடுத்த அவதூறு வழக்கில் சிக்கிய ராகுல் காந்தி: பாட்னா நீதிமன்றம் சம்மன்!

தமிழ்நாடு11 hours ago

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… காலம் தாழ்த்தும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்!

வேலைவாய்ப்பு3 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு3 days ago

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.40,000/- ஊதியத்தில் DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

டிகிரி முடிவர்களுக்கு UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.75,000/- ஊதியத்தில் Airports Authority of India-வில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.1,12,400/- ஊதியத்தில் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!