இந்தியா
இனி உங்களுக்கு 1600 மற்றும் 140 என்று தொடங்கும் எண்களிலிருந்து அழைப்பு வந்தால் பயப்படாமல் எடுத்து கேளுங்கள்… – ஏன் தெரியுமா?…

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 17.01.2025 அன்று வெளியிட்ட அறிக்கையை படித்தீர்களா?… ஃப்ராடு நிறுவனங்களிடம் இருந்து வரும் போலியான அழைப்புகளை நம்பி உங்களது பணத்தை இழக்காமலிருக்க புதிய அறிவிப்புகளை செய்திருக்கிறது.
அதன்படி பயனர்கள் தங்களுக்கு வரும் அழைப்பின் எண்ணைப் பார்த்தே சரியான எண் எது என்றும் தவறான எண் எது என்றும் அறிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு வரும் அழைப்புகள் 1600 மற்றும் 140 என தொடங்கும் எண்களாயிருந்தால் தைரியமாக எடுத்து பேசலாம். அதில் வரும் குறுஞ்செய்திகளை படிக்கலாம் எந்த ஆபத்தும் இல்லை.
ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பின்படி 1600ABCXXX என்று தொடங்கும் எண்ணிலியுருந்து அரசுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து பயனர்களுக்கு நிதி பரிமாற்றம் தொடர்பான அழைப்புகளையும் குறுஞ்செய்திகளையும் அனுப்பிட அனுமதி அளிக்கப்பட் டுள்ளது. இதேபோல் 140ABCXXX என்று தொடங்கும் எண்ணிலிருந்து அந்த நிறுவனங்களின் பிற செயல்பாடுகள் தொடர்பான அழைப்புகள் மற்றம் குறுஞ்செய்திகள் அனுப்பிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர பிற எண்களிலிருந்து வரும் அழைப்புகளையோ குறுஞ்செய்திகளையோ பயனர்கள் பொருட்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவறான அழைப்புகள் குறித்த அச்சம் இல்லாமல் இனி நிம்மதியாக இருக்கலாம்.













