Connect with us

சினிமா

மீண்டும் இணையும் இரஞ்சித்- சந்தோஷ் நாரயணன் கூட்டணி?

Published

on

‘சார்பட்டா2’ படத்தில் இயக்குநர் இரஞ்சித்துடன் மீண்டும் இணைவதை சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, துஷாரா விஷயன், பசுபதி உள்ளிட்டப் பலர் நடித்திருந்த திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. இந்தப் படம் கொரோனா சமயத்தில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது இயக்குநர் இரஞ்சித், நடிகர் விக்ரமுடன் ‘தங்கலான்’ படத்தில் பிஸியாக உள்ளார்.

#image_title

இதன் படப்பிடிப்பு முடிந்ததும் அவர் கமலுடன் அடுத்தப் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ‘சார்பட்டா2’ அறிவிப்பு வெளியானது. முதல் பாகத்தில் இருந்த நடிகர்கள் அனைவருமே இதிலும் இருக்கிறார்கள். ஆனால், முதல் பாகத்தில் இருந்த சந்தோஷ் நாராயணனே இந்தப் பாகத்திலும் தொடர்கிறாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்தது.

ஏனெனில், சந்தோஷ் நாரயணன் – இரஞ்சித் கூட்டணிக்கு இடையில் சிறு மனஸ்தாபம் ஏற்பட்டதால் ’தங்கலான்’ படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இயக்குநர் இரஞ்சித்தின் ‘அட்டக்கத்தி’ படத்தில் இருந்து பயணித்த வந்த சந்தோஷ் நாராயணன் இனிமேல் இரஞ்சித்துடன் இணைவாரா என்ற கேள்வி இருந்த நிலையில், ‘சார்பட்டா2’ அறிவிப்பை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சந்தோஷ்.

இதனால், இந்தப் படத்திற்கும் அவர் இசையமைக்க உள்ளார் என ரசிகர்கள் உற்சாகத்தை பகிர்ந்து வருகின்றனர். விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?