Connect with us

தமிழ்நாடு

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய புரோட்டா மாஸ்டர் கைது!

Published

on

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதான பள்ளி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய தஞ்சாவூரை சேர்ந்த 21 வயதான புரோட்டா மாஸ்டர் விக்னேஷை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்துள்ளது.

#image_title

சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை கடந்த ஜனவரி 5-ஆம் தேதி முதல் காணவில்லை. இதனையடுத்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த மாணவி மற்றும் அவருடன் இருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்.

இந்த விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 21 வயதான விக்னேஷ் சேத்துப்பட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருவது தெரியவந்தது. அந்த மாணவியும், புரோட்டா மாஸ்டர் விக்னேஷூம், காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவியை அழைத்துக்கொண்டு தஞ்சாவூருக்கு செல்ல திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, மாணவிக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. இதில் மாணவி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததும் மாணவியின் பெற்றோர் புரோட்டா மாஸ்டர் விக்னேஷ் மீது புகார் அளித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மாணவியை கர்ப்பமாக்கிய புரோட்டா மாஸ்டர் விக்னேஷை கைது செய்தனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?