சினிமா
‘பத்துதல’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

‘பத்துதல’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

pathuthala
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளத் திரைப்படம் ‘பத்துதல’. இந்தமாத இறுதியில் படம் வெளியாக இருக்கும் நிலையில், இதன் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். ‘பத்துதல’ படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இதன் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழு படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 18 அன்று சென்னையில் நடக்க இருப்பதைத் தெரிவித்தனர். மேலும், படத்தின் பேட்ச் வொர்க் பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் ஒரு பாடலுக்கு சாயிஷா ஆர்யா இணைந்துள்ளதையும் படக்குழு உறுதிப்படுத்தியது.
இப்போது பேட்ச் வொர்க் பணிகள் நிறைவடைந்ததையும் படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துள்ளதையும் இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கன்னடத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற ‘மஃப்டி’ படத்தை காட்சிக்கு காட்சி அப்படியே எடுக்காமல் கதையின் கருவை எடுத்துக் கொண்டு 90 சதவீதம் ‘பத்துதல’ படத்தை வேறாக படமாக்கி இருப்பதாக இயக்குநர் தெரிவித்து இருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ஏ.ஜி.ஆர். என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு மணல் மாஃபியா கிங்காக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.