Connect with us

இந்தியா

விரைவில் வீடு திரும்பும் அபிநந்தன்: அமெரிக்காவிடம் பாகிஸ்தான் உறுதி!

Published

on

பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என பாகிஸ்தான் உறுதியளித்ததாக அமெரிக்கா தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தின் விமானப்படை பாகிஸ்தான் எல்லையை தாண்டி பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்த இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்தது. இந்நிலையில் இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் ராணுவம் இந்திய விமானி அபிநந்தனை கைது செய்தது.

இதனையடுத்து அபிநந்தன் கைதுசெய்யப்பட்ட மற்றும் விசாரணை செய்யப்படும் வீடியோ வெளியானதை அடுத்து அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பில் இருந்து எழுந்தது. இதனையடுத்து அபிநந்தனை விடுவிக்க ராஜாங்க ரீதியிலான நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியது. பாகிஸ்தான் தூதரை இந்தியா அழைத்து அபிநந்தனை விடுவிக்க வலியுறுத்தியது.

அதே நேரத்தில் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்து அபிநந்தனை விடுவிக்க வலியுறுத்தினார். இந்நிலையில் இந்திய வீரர் அபிநந்தனை விரைவில் விடுவிப்பதாக அமெரிக்க தூதரகத்திடம் பாகிஸ்தான் உறுதி அளித்ததாக அமெரிக்கா தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் அபிநந்தன் நாளை வீடு திரும்பலாம் என சில தகவல்கள் உலா வருகின்றன.

வணிகம்8 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?