Connect with us

இந்தியா

மெசேஜ் இல்லை, அழைப்பு இல்லை, OTP இல்லை: வங்கிக்கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் மோசடி..!

Published

on

மெசேஜ் அனுப்பாமல், ஓடிபி பெறாமல், கால் செய்யாமல் லட்சக்கணக்கில் மர்ம மனிதன், ஆசிரியர் ஒருவரின் வங்கி கணக்கிலிருந்து இலட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கி கணக்கிலிருந்து மர்மமான முறையில் திருடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் புதுப்புது முறைகளில் புதுப்புது டெக்னாலஜி மூலம் அவர்கள் அப்பாவிகளின் வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் மோசடி செய்து வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தெற்கு டெல்லியில் உள்ள ஆசிரியர் ஒருவரின் இரண்டு வங்கி கணக்கில் மர்ம மனிதர் ஒருவர் லட்சக்கணக்கில் ஏமாற்றியதாக தெரிகிறது. முதல் கட்ட விசாரணையில் அந்த ஆசிரியருக்கு எந்தவிதமான அழைப்பும் வரவில்லை என்றும், ஓடிபி பகிரப்படவில்லை என்றும், மெசேஜ் எதுவும் வரவில்லை என்றும் விசாரணை செய்த போலீசார் உறுதி செய்துள்ளனர்.

ஆனால் 3 மணி நேரத்தில் 8 பரிவர்த்தனைகள் மூலம் அவருடைய வங்கி கணக்கில் உள்ள முழு தொகையும் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பது மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்று ஆசிரியர் வார சந்தைக்கு சென்று இருந்ததாகவும் அவர் வீட்டுக்கு வருவதற்கு முன்னர் மூன்று மணி நேரத்தில் 8 பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாகவும் மின்னஞ்சல் மூலம் கண்டார். இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவருடைய இரண்டு வங்கி கணக்க்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் உள்ளது என்றும் முதல் பரிவர்த்தனையில் 95 ஆயிரம் ரூபாய், வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் அதனை அடுத்தடுத்து 8 பரிவர்த்தனைகள் நடந்தது என்று அவருடைய வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணமும் மோசடி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிய வருகிறது.

சம்பந்தப்பட்ட ஆசிரியரின் செல்போனை கண்காணித்த போது எந்த விதமான மெசேஜ் வரவில்லை என்றும், ஓடிபி பகரப்படவில்லை என்றும் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். அப்படி என்றால் மர்ம மனிதர்கள் எப்படி அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்தார்கள் என்பது புரியாத மர்மமாக இருக்கிறது என்றும் அவருடைய போனை ஹேக் செய்து ஒரு வேலை மோசடி செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் குறிப்பிடத்தக்கது.

மோசடி செய்பவர்கள் புதிய டெக்னாலஜியை பயன்படுத்தி விதவிதமாக மோசடி செய்து வருவதால் வங்கி பயனாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?