இந்தியா
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கொரோனாவால் பாதிப்பு…
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று பரவலாக குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது அலை உருவெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு 1.50 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரு நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு, இந்தியாவில் ஓமிக்ரன் வைரஸ் பாதிப்பு 3400ஐ தாண்டிவிட்டது. எனவே, பல மாநிலங்களும் இரவு ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கை அறிவிக்க துவங்கியுள்ளன.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா உறுதியான நிலையில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், தன்னுடன் தொடர்பில் உள்ளவர்கள் பரிசோத்னை செய்து கொள்ளவும் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.