செய்திகள்
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு…ஒரே கட்டமாக தேர்தல்….
பெரிதும் எதிர்பார்த்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,
வேட்புமனு தாக்கல் துவக்கம் – 28.01.2022
வேட்புமனு நிறைவு – 04.02.2022
மனுக்கள் பரிசீலனை – 05.02.2022
வாபஸ் பெற கடைசி நாள் – 07.02.2022
வாக்குப்பதிவு நாள் – 19.02.2022
வாக்கு எண்ணிக்கை நாள் – 22.02.2022 என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கி விட துவங்கியுள்ளன.