Connect with us

ஆட்டோமொபைல்

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிக்கத் தடை.. அதிர்ச்சியில் நிறுவனங்கள்!

Published

on

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அடிக்கடி தீப்பற்றி சம்பவம் ஆங்காங்கே நடந்து வரும் நிலையில், புதிய மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அடுத்த 10 ஆண்டுகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு 50 சதவீதமாக அதிகரிக்கும் என கூறப்பட்டு வந்தது.

ஆனால் தொடர்ந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி எறியும் சம்பவங்கள் செய்திகளாக வெளிவரும் நிலையில், எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவது குறித்து பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்காத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என ஒன்றிய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்து இருந்தார்.

ஒன்றிய அமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஓலா, ஒக்கினோவா, பியூர் இவி உள்ளிட்ட நிறுவனங்கள் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் வாகனங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளன.

மேலும் புதிய மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிக்கவும் ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. எனவே ஏற்கனவே சந்தையில் உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் உற்பத்தி செய்ய எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.

அண்மையில் ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அடிக்கடி பழுதாகிறது என்ற காரணத்துக்காக 2 லிட்டர் பெட்ரோல் ஊற்றி ஒருவர் எரித்த வீடியோ வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

வணிகம்21 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?