ஆட்டோமொபைல்
புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிக்கத் தடை.. அதிர்ச்சியில் நிறுவனங்கள்!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அடிக்கடி தீப்பற்றி சம்பவம் ஆங்காங்கே நடந்து வரும் நிலையில், புதிய மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அடுத்த 10 ஆண்டுகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு 50 சதவீதமாக அதிகரிக்கும் என கூறப்பட்டு வந்தது.
ஆனால் தொடர்ந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி எறியும் சம்பவங்கள் செய்திகளாக வெளிவரும் நிலையில், எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவது குறித்து பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்காத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என ஒன்றிய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்து இருந்தார்.
ஒன்றிய அமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஓலா, ஒக்கினோவா, பியூர் இவி உள்ளிட்ட நிறுவனங்கள் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் வாகனங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளன.
மேலும் புதிய மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிக்கவும் ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. எனவே ஏற்கனவே சந்தையில் உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் உற்பத்தி செய்ய எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.
அண்மையில் ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அடிக்கடி பழுதாகிறது என்ற காரணத்துக்காக 2 லிட்டர் பெட்ரோல் ஊற்றி ஒருவர் எரித்த வீடியோ வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
Ola electric scooter owner pours petrol on his S1 PRO and sets it on fire
Location – Ambur, Tirupati district.
Video – Sun News#ola #olaelectric pic.twitter.com/FYZ2kwHQMW
— RushLane (@rushlane) April 26, 2022