இந்தியா
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்று வாட்ஸ் அப்-பில் அசத்தல் வசதி: என்னென்ன தெரியுமா?
சமூக வலைதளங்களில் முன்னணி இடத்தில் இருக்கும் வாட்ஸ்அப் பல மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே.
தற்போது எந்த ஒரு மெசேஜ் அனுப்புவதாக இருந்தாலும், அழைப்பு விடுக்கப்படுவதாக இருந்தாலும், பைல்கள் அனுப்பப்படுவதாக இருந்தாலும் பெரும்பாலும் வாட்ஸ் அப் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மில்லியன்கணக்கான பயனாளிகளுக்கு வாட்ஸ்ஆப் அவ்வப்போது புதிய வசதிகளை செய்து தருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது மேலும் சில கூடுதல் வசதிகளை செய்துள்ளது.
இதன்படி கான்டாக்ட் லிஸ்டில் இல்லாத நபருக்கும் தகவல் அனுப்பும் வசதி வாட்ஸ் அப் செயலியில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேபோல் 2ஜிபி வரையிலான பைல்களை இனி அனுப்ப முடியும் அளவுக்கு வாட்ஸ்அப் செயலி மேம்படுத்தப்படுகிறது.
மேலும் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் இருப்பது போன்ற ரியாக்ஷனை வெளிப்படுத்தும் எமோஜி விரைவில் வாட்ஸ் அப் செயலியில் அறிமுகமாகிறது.
வாட்ஸ்அப் குரூப்பில் எந்த ஒரு நபரும் பதிவிடும் தகவலை அட்மின் நீக்குவதற்கான வசதி புதிதாக அறிமுகமாக உள்ளது. மேலும் வாட்ஸ்அப் குரூப்களில் 32 பேர் வரை பங்கேற்கும் வசதியும் வர இருக்கிறது. மேலும் ஒரே நேரத்தில் பல குரூப்புகளை கையாளும் வசதியும் விரைவில் அறிமுகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.