சினிமா செய்திகள்
மாஸ்டர்’ ‘அண்ணாத்த’ படங்களை மறந்துவிட்டு பேசிய சூர்யா: கிழித்தெடுத்த நெட்டிசன்கள்
மாஸ்டர் மற்றும் அண்ணாத்த போன்ற படங்களை மறந்துவிட்டு கொரோனா வைரஸ் பாதிப்பின் போது தெலுங்கு திரைப்படங்கள் தான் தைரியமாக திரைப்படங்களை வெளியிட்டது என சூர்யா பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்திற்காக தமிழ்நாடு கேரளா ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சூர்யா புரமோஷன் செய்தார்.
இந்த படத்திற்கு தமிழகத்தில் பாமக எதிர்ப்பு தெரிவித்தது போன்ற ஒரு மாயை ஏற்படுத்தினாலும் இலவச விளம்பரம் செய்ய நாங்கள் தயாராக இல்லை என்று பாமகவினர் தெரிவித்துவிட்டனர். இருப்பினும் பாமக தியேட்டர்களை தாக்கியது போன்ற வதந்திகளை ஒரு சிலர் கிளப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஐதராபாத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தின் புரமோஷன் விழாவில் சூர்யா பேசியபோது கொரோனா நேரத்தில் தெலுங்கு திரையுலகினர் பல நல்ல படங்களை வெளியிட்டு இந்தியாவுக்கு முன்னுதாரமாக இருந்தனர் என்றும் அதன் பின்னர்தான் மற்ற மொழிகளில் படங்கள் வெளியானது என்றும் பேசினார்.
அவரது இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொரோனா முதல் அலையின்போது போது மாஸ்டர் திரைப்படம் இரண்டாவது அலையின்போது அண்ணாத்த மற்றும் மாநாடு திரைப்படமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள் தமிழில் இருக்கும் போது தெலுங்கு திரைப்படங்கள் குறித்து சூர்யா பேசியது கண்டனத்துக்குரியது என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.