சினிமா செய்திகள்
நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது: நயன்தாரா அறிவிப்பு
விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என நயன்தாரா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள் என்பதும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறிவருகின்றன
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை நயன்தாரா விஜய் டிவியில் பேட்டி கொடுத்துள்ளார். டிடி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நயன்தாரா அணிந்திருக்கும் மோதிரம் குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த நயன்தாரா ’அது நிச்சயதார்த்த மோதிரம்’ என்று கூறியுள்ளார்
இதனை அடுத்து விக்னேஷ் சிவனுக்கும் அவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்பதை அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிகிறது. அதேபோல் விக்னேஷ் சிவன் உடன் உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று டிடி கேட்க அதற்கு நயன்தாரா ’அவரிடம் எனக்கு எல்லாமே பிடித்துள்ளது’ என்று கூறியபின் ஒரு சிலவற்றை பிடிக்கவில்லை அதையும் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்
விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 10.30 மணிக்கு வெளியாக உள்ளது என்பது ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தன்னைப் பற்றி மேலும் பல விஷயங்களைத் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
???????????? Lady SuperStar நயன்தாரா – வரும் ஞாயிறு காலை 10:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #LadySuperstarNayanthara pic.twitter.com/TmY15QeVZ9
— Vijay Television (@vijaytelevision) August 10, 2021