உலகம்
பூமியை கடந்து சென்ற 1600 அடி நீள கோள்.. நாசாவின் கண்டுபிடிப்பால் அதிர்ச்சி..!

விண்வெளி எப்போதும் மர்மமாகவும் ஆச்சரியம் தரக்கூடியதாகவும் இருக்கும் என்றும் நாம் விண்வெளியை அறிந்தது கையளவு தான் என்றும் இன்னும் அறியாதது கடல் அளவு என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பூமியை கடந்து 1600 அடி நீள கோள் ஒன்று சென்றதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சிறு கோளால் பூமிக்கு ஆபத்து வருமா? என்பது குறித்து ஆய்வு நடந்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் அதாவது பிப்ரவரி 3ஆம் தேதி பூமியை கடந்து சுமார் 1.8 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் கோள் ஒன்று பறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட ஐந்து மடங்கு குறைவாகும். 2011 AG5 என்று பெயரிடப்பட்ட இந்த சிறுகோள் அகலத்தை விட மூன்று மடங்கு நீளமானது. இந்த சிறுகோள் பாதுகாப்பாக பூமியைக் கடந்ததாகவும், இந்த கோளால் பூமிக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்றும் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

asteroid
இந்த கோளின் அளவு, வடிவம், சுழற்சி மற்றும் மேற்பரப்பு விவரங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்த் வருகின்றனர். இதேபோன்று ஒரு சிறுகோள் கடந்த 2011 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் 12 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இன்னொரு சிறு கோள் கண்டறியபட்டுள்ளது.
இந்த சிறுகோளை விஞ்ஞானிகள் கூர்ந்து ஆராய்ந்ததில் அது 1,600 அடி நீளமும் 500 அடி அகலமும் கொண்ட பாறை என்பது தெரியவந்தது. சிறுகோளின் அளவு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உயரத்திற்கு கிட்டத்தட்ட சமமானது ஆகும்.
2011 AG5 சிறுகோள் சூரியனை 621 நாட்களுக்கு ஒருமுறை வட்டமிடுவதாகவும், இந்த சிறுகோள் அடுத்ததாக பூமிக்கு அருகில் 2040 ஆம் ஆண்டு வரும் என்றும் கூறப்படுகிறது.



















