Connect with us

சினிமா செய்திகள்

சிம்புவின் அடுத்த படத்தின் முக்கிய பணி இன்று ஆரம்பம்!

Published

on

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வந்த ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த நடிகர் சிம்பு, தற்போது அடுத்த படத்திற்கான பணியை தொடங்கி விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் ’நதிகளிலே நீராடும் சூரியன்’. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதும் இதனை அடுத்து இன்று முதல் இந்த படத்தின் முக்கிய பணிகள் தொடங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த படத்திற்காக போட்டோ ஷூட் இன்று சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்று வருவதாகவும் இதில் சிம்பு, கௌதம் மேனன் உள்பட படக்குழுவினர் ஸ்டில் போட்டோகிராபர்களும் கலந்து கொண்டனர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் கூறப்படுகிறது.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ திரைப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பது கவிஞர் தாமரை இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் கவுதம் மேனன் இணைந்த ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது மீண்டும் அதே கூட்டணி இணைந்து உள்ளதை அடுத்து இந்த கூட்டணியும் ஒரு ஹிட் படத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?