சினிமா செய்திகள்
சிம்புவின் அடுத்த படத்தின் முக்கிய பணி இன்று ஆரம்பம்!
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வந்த ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த நடிகர் சிம்பு, தற்போது அடுத்த படத்திற்கான பணியை தொடங்கி விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் ’நதிகளிலே நீராடும் சூரியன்’. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதும் இதனை அடுத்து இன்று முதல் இந்த படத்தின் முக்கிய பணிகள் தொடங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த படத்திற்காக போட்டோ ஷூட் இன்று சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்று வருவதாகவும் இதில் சிம்பு, கௌதம் மேனன் உள்பட படக்குழுவினர் ஸ்டில் போட்டோகிராபர்களும் கலந்து கொண்டனர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் கூறப்படுகிறது.
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ திரைப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பது கவிஞர் தாமரை இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் கவுதம் மேனன் இணைந்த ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது மீண்டும் அதே கூட்டணி இணைந்து உள்ளதை அடுத்து இந்த கூட்டணியும் ஒரு ஹிட் படத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.