இந்தியா
இந்திய பங்குச்சந்தை கடும் சரிவு: லட்சக்கணக்கில் லாஸ் ஆன முதலீட்டாளர்கள்!
இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து இலட்சக்கணக்கானோர் தங்களுடைய பணத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் ஆரம்பத்திலிருந்தே இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது . கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் 62 ஆயிரத்துக்கும் மேல் இருந்த மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 10000 புள்ளிகள் சரிந்து தற்போது 52,000 என சரிந்துள்ளதால் லட்சக்கணக்கான கோடிகளை முதலீட்டாளர்கள் கடந்த ஆறு மாதத்தில் இழந்துள்ளனர்.
கடந்த வாரம் முழுவதுமே கிட்டத்தட்ட பங்குச் சந்தை சரிந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை சுமார் ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட புள்ளிகள் சரிந்துள்ளது.
சற்று முன்வரை 52870 புள்ளிகள் என சென்சஸ் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் நிப்டி 400க்கும் மேற்பட்ட புள்ளிகள் சரிந்து 15770 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக பங்குச்சந்தை சரிந்து வருவதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.