சினிமா செய்திகள்
செல்வராகவனின் அடுத்த படத்தை இயக்கும் சர்ச்சை இயக்குனர்!
சர்ச்சைக்குரிய திரைப்படங்களை இயக்குவதாக குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் இயக்குனர் ஒருவர் செல்வராகவன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
’பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன். இவர் கடந்த ஆண்டு ’திரௌபதி’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஒரு குறிப்பிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதும் எதிர்ப்பையும் மீறி இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மோகன் இயக்கிய ’ருத்ர தாண்டவம்’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த படமும் சர்ச்சையை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குனர் மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவன் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் செல்வராகவன் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி என்றும் இந்த படம் குறித்த மேலும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் உங்கள் அனைவரின் ஆதரவுக்கு நன்றி என்றும் மோகன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து செல்வராகவன் தனது டுவிட்டரில் மோகன் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக காத்திருக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஏற்கனவே இயக்குனர் செல்வராகவன் அவர்கள் ’சாணிக்காகிதம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தின் முக்கிய வில்லன் வேடத்தில் செல்வராகவன் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.
Pleasure is all mine ! Looking forward to this exciting new journey . God bless https://t.co/A3X8WtizV8
— selvaraghavan (@selvaraghavan) December 4, 2021