Connect with us

தமிழ்நாடு

பொங்கல் பண்டிகைக்கு எத்தனை சிறப்பு பேருந்துகள்? அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

Published

on

பொங்கல் பண்டிகைக்கு எத்தனை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தீபாவளி, பொங்கல் உள்பட விசேஷ தினங்களில் தமிழக அரசின் சிறப்பு பேருந்துகள் இயங்கும் என்பதும் இதன் மூலம் லட்சக்கணக்கானோர் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையை கொண்டாட இருக்கும் நிலையில் அதை ஒட்டி தொடர் விடுமுறையும் வரும் நிலையில் ஏராளமானோர் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இரயில்களில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவுகள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது பேருந்துகளில் முன்பதிவு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனவரி 11ஆம் தேதியிலிருந்து சென்னையில் இருந்து பொங்கல் பண்டிகை கால சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் ஜனவரி 17ஆம் தேதியில் இருந்து சென்னைக்கு வரும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பேருந்துகளுக்கு முன்பதிவு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் அதனை பயன்படுத்தி பொங்கல் பண்டிகைக்கான பேருந்து முன்பதிவு செய்துகொள்ள பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?