தமிழ்நாடு
கமல் இன்னும் குழந்தையாகவே இருக்கிறார்: ஜெயக்குமார் அதிரடி பேட்டி!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயல் பாதித்த இடங்களை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். இதனை பல்வேறு கட்சியினரும் விமர்சனம் செய்தனர். அதே போல மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் விமர்சித்தார். இதற்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை எழும்பூரில் அதிமுக சார்பில் 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை அமைச்சர் ஜெயக்குமார் அனுப்பி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமாரிடம் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் முதல்வரின் ஹெலிகாப்டர் பயணத்தை தூரத்துபார்வை என விமர்சித்துள்ளாரே என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஏரியல் சர்வே என்ற ஒரு வார்த்தையே இருக்கிறது முதலில் கமல் அதைப்பற்றி படிக்கவேண்டும். பேரிடர் காலங்களில் முதல்வரோ, பிரதமரோ ஆகாய மார்க்கமாக சேதங்களை பார்வையிடுவது காலம்காலமாக நடந்து வருகிறது. கமல் இன்னும் குழந்தையாகவே உள்ளார். அவர் இன்னும் களத்தூர் கண்ணம்மா ஸ்டைலிலேயே இருக்கிறார் என்றார் அதிரடியாக.