தமிழ்நாடு
எந்தக் கொம்பனாலும் முடியாது: ஆளுனருக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி
சனாதனத்தை மீண்டும் உயிர்ப்பிக்க எந்த கொம்பனாலும் முடியாது என அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சனாதனம் குறித்து பேசினார். சனாதன தர்மம் தான் இந்த நாட்டை காக்க வைக்கும் என்றும் சனாதனத்தை தெரிந்துகொள்வது முக்கியம் என்றும் அவர் கூறியிருந்தார்.
ஒரு மாநிலத்தின் ஆளுநர் சனாதன தர்மம் குறித்து எப்படி பேசலாம் என பல்வேறு கட்சி தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்பட பலர் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது அமைச்சர் துரைமுருகன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் துரைமுருகன் இந்த மண்ணின் பெருமை தெரியாமல் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசி இருக்கிறார் என்றும் சனானத்திற்கு சாவு மணி அடித்த மண், இந்த மண் என்றும் மீண்டும் அதை உயிர்ப்பிக்க எந்த கொம்பனாலும் முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.