Connect with us

சினிமா செய்திகள்

சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான் முயற்சிக்கு அமைச்சர் ஆதரவு!

Published

on

சென்னையில் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் புதிய முயற்சி ஒன்றை ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் எடுக்க இருக்கும் நிலையில் இந்த முயற்சிக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்து இருக்கிறேன் என அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களை ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் நேற்று சந்தித்தார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை இணையதளத்தில் வைரலாகினாலும், இந்த சந்திப்பு எதற்காக என்பது குறித்த தகவல் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இது குறித்து விளக்கமளித்துள்ளார். இந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் என்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சந்தித்தார். அப்போது, தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் சென்னையில் தான் முன்னெடுக்க இருக்கும் சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் புதிய முயற்சி குறித்து விளக்கிக் கூறினார். அதற்குத் தேவையான உதவிகளைச் செய்து தருவதாகக் கூறி அவருக்கு உறுதியளித்தேன்’

சென்னையை பெருமைப்படுத்தும் அளவிற்கு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் முயற்சி என்னவாக இருக்கும் என்பதை அறிய அனைத்து இசை ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்7 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?