சினிமா செய்திகள்
சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான் முயற்சிக்கு அமைச்சர் ஆதரவு!
சென்னையில் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் புதிய முயற்சி ஒன்றை ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் எடுக்க இருக்கும் நிலையில் இந்த முயற்சிக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்து இருக்கிறேன் என அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களை ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் நேற்று சந்தித்தார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை இணையதளத்தில் வைரலாகினாலும், இந்த சந்திப்பு எதற்காக என்பது குறித்த தகவல் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இது குறித்து விளக்கமளித்துள்ளார். இந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் என்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சந்தித்தார். அப்போது, தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் சென்னையில் தான் முன்னெடுக்க இருக்கும் சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் புதிய முயற்சி குறித்து விளக்கிக் கூறினார். அதற்குத் தேவையான உதவிகளைச் செய்து தருவதாகக் கூறி அவருக்கு உறுதியளித்தேன்’
சென்னையை பெருமைப்படுத்தும் அளவிற்கு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் முயற்சி என்னவாக இருக்கும் என்பதை அறிய அனைத்து இசை ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.