தமிழ்நாடு
தனிச்சின்னத்தில் போட்டியா? வைகோவின் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
திமுக கூட்டணியில் ஏற்கனவே இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா மூன்று மற்றும் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன என்ற நிலையில் தற்போது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று திமுக உடனான முதல்கட்ட தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்ததாகவும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மேலும் வரும் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கூறிய அவர், வரும் தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என்று கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கம்யூனிஸ்ட் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என திமுக வலியுறுத்தி வரும் நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டி என்ற வைகோவின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
























