சினிமா
புது வீடு கட்டி குடியேறிய இயக்குனர் மாரி செல்வராஜ்… முக்கிய பிரபலங்கள் விசிட்….
இயக்குனர் பா.ரஞ்சித்திடம் உதவியாளராக பணிபுரிந்தவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் இயக்குனராக மாறினார். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார்.
சாதி பேரால் நிகழ்த்தப்படும் கொடுமையை அப்படம் பேசியது. அடுத்து தனுஷ் நடித்த கர்ணன் படத்தை இயக்கினார். இப்படத்திலும் சாதி கொடுமைகளை பேசியிருந்தார்.
இவர் சென்னையில் புதிய வீடு கட்டு குடியேறியுள்ளார். இந்த விழாவில் பா ரஞ்சித், இயக்குனர் ராம், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாரி செல்வராஜ் அடுத்து இயக்கவுள்ள புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.