Connect with us

இந்தியா

மனைவியின் கள்ளக்காதலனின் மனைவியை திருமணம் செய்து பழி தீர்த்த நபர்!

Published

on

பீகார் மாநிலத்தில் ஒரு நபர் தனது மனைவியுடன் கள்ளக்காதல் உறவு வைத்துள்ளவரின் மனைவியை திருமணம் செய்து பழிதீர்த்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

#image_title

பீகாரின் ககாரியா மாவட்டத்தை சேர்ந்த நீரஜ் தனது மனைவி ரூபி மற்றும் 4 குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். ஆனால் இவரது மனைவி ரூபிக்கு முகேஷ் என்ற நபருடன் கள்ளக்காதல் உறவு இருந்து வந்துள்ளது. முகேஷுக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. நீண்ட நாட்களாக இருந்து வந்த இவர்களது கள்ள உறவு நீரஜுக்கு தெரியவர ரூபியும் முகேஷும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு தனியாக வாழ்ந்து வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த நீரஜ் காவல் நிலையம், கிராம பஞ்சாயத்து என பல இடங்களை நாடிய பின்னர் முகேஷை பழிதீர்க்க ஒரு வித்தியாசமான முடிவை எடுத்தார். மனைவியால் கைவிடப்பட்ட நீரஜ், முகேஷின் மனைவியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் முகேஷின் மனைவி பெயரும் ரூபி என்பதாகும்.

இந்நிலையில் முகேஷின் மனைவி ரூபியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட நீரஜ் சில தினங்களுக்கு முன்னர் அவரை உள்ளூர் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இதில் நீரஜின் மூன்று குழந்தைகள் முகேஷ்-ரூபி ஜோடியிடமும், முகேஷின் 2 குழந்தைகள் மற்றும் நீரஜின் 1 குழந்தை என 3 குழந்தைகள் நீரஜ்-ரூபி ஜோடியிடமும் வளர்ந்து வருகின்றன. இந்த பழிக்கு பழி சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?