Connect with us

இந்தியா

உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை: மோடிக்கு கடிதம் எழுதி ஒன்றிய அரசை வறுத்தெடுத்த மம்தா!

Published

on

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பெட்ரோ மற்றும் டீசல் விலையேற்றத்தைக் கண்டித்தும், அதைக் குறைக்கச் சொல்லி வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் மனசாட்சியற்ற விலையேற்றமானது எளிய மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மே மாதத்தில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை 8 முறை உயர்த்தப்பட்டு உள்ளது. இதில் ஜூன் மாதத்தில் மட்டும் 6 முறை உயர்ந்துள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது. எனவே பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் விலைகளை உடனடியாக குறைத்து, மக்களுக்குத் தேவையான நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் செஸ் வரியானது தொடர்ந்து உயர்த்தப்படுகிறது. அதன் மூலம் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான 42 சதவீத வரி மறுக்கப்பட்டு வருகிறது. இதை சரி செய்து கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை மாற்றுங்கள்’ என்று காட்டமாக கூறியுள்ளார்.

வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளது.

 

வணிகம்12 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?