Connect with us

இந்தியா

39 ஆண்டுகள் கழித்து சந்தித்த முன்னாள் மாணவர்கள்: இடம் மாறிய கல்லீரல்

Published

on

39 ஆண்டுகளுக்குப் பின்னர் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வில் கல்லீரல் தானம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் பெரியாறு ஊராட்சி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 39 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தாங்கள் படித்த அதே பள்ளியில் சந்திக்க முடிவு செய்தனர்.

கடந்த 1983-ஆம் ஆண்டு எஸ்எஸ்எல்சி படித்த மாணவர்களின் சந்திப்பு மீண்டும் சமீபத்தில் நடந்தது. இந்த சந்திப்பில் 50 முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். அப்போது ரகுநாதன் என்பவருக்கு கல்லீரல் பாதிப்பு இருந்ததால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரியவந்தது .

இதனை அடுத்து ஐந்து நண்பர்கள் தங்களுடைய கல்லீரலை தானமாக வழங்க முன்வந்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் அவர்களது கல்லீரல் ரகுநாதனுக்கு பொருந்தவில்லை. இதனை அடுத்து முன்னாள் மாணவர்களில் ஒருவரான சுரேஷின் மனைவி தன்னுடைய கல்லீரலை தானமாக கொடுக்க முன் வந்தார் .

அவருடைய கல்லீரல் ராமநாதனுக்கு சரியாக பொருந்தும் என தெரிந்ததும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும் இருவருமே நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் மனிதநேயத்தின் உச்சகட்டமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ள நிகழ்வு அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?