இந்தியா
55 ஆயிரம் வாத்துகளை கொல்ல உத்தரவு: கேரள அரசு அதிரடி!
கேரளாவில் 55 ஆயிரம் வாத்துகளை கொல்ல அம்மாநில அரசு உத்தரவிட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதாக தெரிகிறது. இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் உள்ள 55 ஆயிரம் வாத்துக்களை கொல்ல கேரள அரசு உத்தரவிட்டு இருப்பதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் பறவை காய்ச்சல் காரணமாக ஆலப்புழா பகுதியில் உள்ள 20 ஆயிரம் வாத்துகளையும், கோட்டயம் பகுதியில் உள்ள 35 ஆயிரம் வாத்துக்களையும் கொல்ல கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதுமட்டுமின்றி இறைச்சி கடைகளில் வாத்து, கோழி மற்றும் காடை விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் கேரள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.