Connect with us

தமிழ்நாடு

கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் வெறும் விருப்ப பாடம்தானா? சரமாரி கேள்விகளைக் கேட்ட நீதிமன்றம்!

Published

on

கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்கக் கோரும் வழக்கை உயர் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் மொழியைக் கட்டாயமாக்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த பொன்குமார் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்து இருந்தார்.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கேந்திர வித்தியாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. சமீபத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் தமிழ் கற்றுத்தரப்படாது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு வகுப்பில் 20 மாணவர்களுக்குத் தமிழ் படிக்க விருப்பம் இருந்தால் அவர்களுக்கு மட்டும் கற்றுத்தரப்படும். இதற்கான ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு எடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது ஏற்புடையது அல்ல. கேந்திர வித்தியாலயா கல்வி நிறுவனம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்குக் கீழ் தான் வருகிறது, மேலும் தமிழகத்தில் உள்ள தமிழ் கற்றல் ஆகிய விதிகளுக்கு எதிராக இது உள்ளது. தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் 50 சதவீதம் தமிழ் மாணவர்கள் உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் தமிழ் புறக்கணிக்கப்படுவது ஏற்படையது அல்ல. எனவே கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக இருக்க வேண்டும் என்றும், தமிழ் ஆசியர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற கிளை மதுரை பிரிவில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கானது நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் 2006-ம் ஆண்டு கல்வி சட்டத்தின் கீழ் 1 முதல் 10 வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழ் கட்டாயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் விருப்ப பாடமாக அறிவித்தது எப்படி என்று மனுதாரர் தரப்பிலிருந்து கேள்வி எழுப்பப்பட்டது.

கேந்திரிய வித்தியாலயா பள்ளி சார்பில் வாதாடிய வழக்கறிஞர், மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதற்காகதான் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு படிக்கும் மாணவர்களிள் 50 சதவீதத்தினர் வெளிமாநிலத்திலிருந்து இங்கு வந்து படிக்கும் மாணவர்களாக உள்ளனர். எனவே தமிழ் விருப்ப பாடமாகக் கற்பிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பிரெஞ்ச், ஜெர்மன், பெங்காலி உள்ளிட்ட மொழிகளை கற்கலாம். ஆனால் தமிழகத்தில் தமிழ் மொழியைக் கற்கக் கூடாதா? என கேள்வி எழுப்பினர். இது போன்ற வாதங்களை நாங்கள் ஏற்கமாட்டோம். பிரதமர் தாய் மொழியில் கற்பதை ஊக்குவிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். ஆனால் நீங்கள் இந்தி, ஆங்கிலத்தை மற்றும் கற்றுக்கொடுப்பது ஏன்? கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் தமிழ் விருப்ப பாடமாக உள்ளது என்று கூறுவதை ஏற்க முடியாது. தமிழ் மொழி மட்டும் என நாங்கள் கேட்கவில்லை. அனைத்து பிராந்திய மொழிகளுக்காகவும் சேர்த்துத்தான் கேட்கிறோம். இப்படியே சென்றால் தமிழ் மொழி தெரிந்திருந்தால் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் இடம் இல்லை என்ற நிலை கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

தாய் மொழியில் கற்கும் சீனா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் நல்ல முன்னேற்றத்தில் உள்ளன. வழக்கு குறித்த விரிவான தீர்ப்பை வழங்க, நாளை மீண்டும் வழக்கு விசாரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்6 மணி நேரங்கள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் இரட்டை பெயர்ச்சி: சூரியன் – சுக்கிரன் இணை மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

DA உயர்வு 2026: அகவிலைப்படி 63% ஆக உயருமா? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் பொற்காலம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: பூச நட்சத்திரத்தில் குரு பிரவேசம் – இந்த 4 ராசிகளுக்கு ஜூன் 18 முதல் பொற்காலம் தொடக்கம்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வா? புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் பரிந்துரையின் முழு விவரம்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

ஒரே நேரத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை கடக்கும் சந்திரன்: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது!

vinod
சினிமா செய்திகள்6 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

இந்தியா4 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

சினிமா செய்திகள்6 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா4 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

வணிகம்4 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

கட்டுரைகள்3 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

Translate »
Southwest florida real estate may 2026 coconut point residences. Heavy equipment transport bucks pa. heavy equipment transport westmoreland pa.