Connect with us

உலகம்

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கை நாங்கள் கவனித்து வருகிறோம்: அமெரிக்கா கருத்து!

Published

on

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், பிரதமர் நரேந்திரமோடி, நீரவ் மோடி மற்றும் லலித் மோடியை குறிப்பிட்டு ‘அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிகிறது ஏன்? என கேள்வி எழுப்பினார். மோடி சமூகம் குறித்து அவதூறு உண்டாக்கும் வகையில் பேசியதாக, ராகுல்காந்தியின் மீது பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏவும், முன்னாள் மந்திரியுமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

ராகுல் காந்தி குற்றவாளி

கடந்த 4 வருடங்களாக நடைபெற்ற இந்த வழக்கில், மார்ச் மாதம் 24 ஆம் தேதி ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேவேளையில், இந்த வழக்கில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யவும் அவகாசம் வழங்கி, 30 நாட்கள் ஜாமினும் வழங்கியது. பிறகு, ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது.

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். இந்த பிரச்சனை கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து வருகிறது.

அமெரிக்கா கருத்து

அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசு கருத்து தெரிவித்துள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகைத் துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேலிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கு மரியாதை அளிப்பது தான் ஜனநாயகத்திற்கு அடிப்படை.

இந்திய நீதிமன்றத்தில் நடைபெறும் ராகுல் காந்தி மீதான வழக்கை நாங்கள் கவனித்து வருகிறோம். கருத்துச் சுதந்திரம் உள்பட ஜனநாயக மதிப்புகளை பாதுகாப்பது குறித்த நிலைப்பாட்டை இந்திய அரசுடன் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம் என்றார்.

வணிகம்21 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?