தமிழ்நாடு
கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி வேண்டி தலைமை பொறுப்பு நீதிபதியிடம் கோரிக்கை!

தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி வேண்டும் என்று தலைமை பொறுப்பு நிதிபதியிடம் திமுகக் கோரிக்கை வைத்துள்ள நிலையில் 10:30 மணியளவில் விசாரணை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழ் நாடு அரசு கருணாநிதி உடலினை தற்போது ராஜிஜி மண்டபம் அருகில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அண்ணா சமாதியில் நல்லடக்கம் செய்ய அனுமதி வேண்டு என்று ஸ்டாலின், பேராசிரியர் அறிவழகன் மற்றும் வைகோ போன்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
திமுகத் தொண்டர்களும் மெரினாவில் தான் தலைவர் கருணாநிதியின் உடலினை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று கொந்தளிப்பில் உள்ளனர்.













