Connect with us

இந்தியா

நுழைவுத்தேர்வில் தேர்ச்சி மட்டும் போதாது, இதுவும் வேண்டும்.. ஜே.இ.இ. தேர்வுக்கு தகுதி மாற்றம்!

Published

on

12ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு எழுதி அடுத்த கட்டமாக ஐஐஐடி, என்ஐடி போன்றவற்றில் சேர்ந்து படித்து வரும் நிலையில் தற்போது நுழைவு தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றால் போதாது என கூடுதல் தகுதியும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை நடத்தும் ஜே.இ.இ. முதல்நிலை தேர்வு ஜனவரி 24 முதல் 31 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்நிலைத் தேர்வின் இரண்டாம் பருவ தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்நிலைத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 15 முதல் ஜனவரி 12 வரை தரப்படும் எனவும், முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 2.5 லட்சம் பேர் முதன்மை தேர்வு எழுதும் தகுதியைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2023 – 24 ஆம் கல்வி ஆண்டில் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு இரண்டு முறை நடத்தப்பட இருப்பதாகவும் முதல் முறை ஜனவரியிலும் இரண்டாவது முறை ஏப்ரலில் நடைபெறும் என்றும் தமிழ் உள்பட 13 மொழிகளில் இந்த தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முழு தகவல் பெற டெஸ்ட் அப்யாஸ் என்ற செயலியை டவுன்லோடு செய்து மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுவரை தேசிய தேர்வு முகமை நடத்தும் ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அடுத்த கட்டமாக ஐஐஐடி, என்ஐடி போன்றவற்றில் சேர்ந்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முறை கூடுதல் தகுதியாக ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் 12ஆம் வகுப்பு தேர்வில் 75 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை கூடுதல் தகுதியாக அறிவித்துள்ளது. எஸ்சி, எஸ்டி ஆக இருந்தால் 65% மதிப்பெண்கள்எடுத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் தகுதி ஜே.இ.இ. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?