இந்தியா
தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை காப்பாற்றிய ரியல் வீரருக்கு ஜாவா பைக் பரிசு!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள வாங்கனி ரயில் நிலையத்தில் பார்வையற்ற பெண் ஒருவர் தனது குழந்தையுடன் ரயில்வே நடைமேடையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த குழந்தை ரயில்வே தண்டவாளத்தில் தவறி விழுந்தது.
அந்த நேரத்தில் ரயில் மிக அருகில் வந்து விட்டதைப் பார்த்த ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே என்பவர் தன்னுடைய உயிரையும் துச்சமாக மதித்து ஓடி சென்று அந்த குழந்தையை காப்பாற்றி கடைசி நொடியில் தன்னுடைய உயிரையும் காப்பாற்றி கொண்டார்.
இதுகுறித்து சிசிடிவி வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் ரியல் ஹீரோவான அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தது. மறுநாள் மயூர் ஷெல்கே அலுவலகம் சென்றபோது அவரை மேலதிகாரிகள் வரவேற்று கைதட்டி வரவேற்றனர். அவருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தண்டவாளத்தில் விழுந்த குழந்தை தன்னுடைய உயிரையும் துச்சமாக மதித்து நொடியும் தாமதிக்காமல் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே அவர்களுக்கு புதிய பைக் ஒன்றை பரிசளிக்க அளிக்க விருப்புவதாக ஜாவா நிறுவனம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி உடனடியாக அந்த பைக்கை அவருக்கு டெலிவரி செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன இதனை அடுத்து அந்த பைக் நிறுவனத்திற்கும் தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.