Connect with us

இந்தியா

இனிமேல் ரயில் பயணத்தின்போது இதை செய்ய முடியாது.. புதிய விதிகள் அமல்!

Published

on

ரயில் பயணம் என்பது குறைந்த கட்டணத்தில் நிம்மதியான பயணம் மேற்கொள்ளலாம் என்பதால் ஏராளமான பயணிகள் தங்கள் பயணத்திற்கு ரயிலை தேர்வு செய்துள்ளார்கள் என்பதும் ரயிலில் உள்ள வசதி வேறு எந்த போக்குவரத்திலும் இருக்காது என்பதே பொதுவான பொதுமக்களின் கருத்து என்பதும் தெரிந்ததே.

ரயில் பயணத்தை திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இரவில் பயணம் செய்பவர்களுக்கு படுக்கை வசதியை ரயிலில் உண்டு என்பதால் ரயில் பயணமே சிறந்தது என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

இந்த நிலையில் ரயில் பயணத்தின்போது பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வண்ணம் சிலர் சில செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தற்போது ரயில்வே துறை புதிய விதிகளை அமல்படுத்தி உள்ளது. இந்த புதிய விதிகளின் படி உங்கள் இருக்கையின் அருகில் உள்ளவர்கள் அல்லது ஒரே பெட்டியில் உள்ளவர்கள் மொபைல் ஃபோனில் உரத்த குரலில் பேசினால் அல்லது பயணிகளின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் சத்தமாக பாடல்களை கேட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகள் மற்றும் ரயில்வே பராமரிப்பு ஊழியர்கள் ரயில் பயணத்தின் போது சத்தமாக பேசுவதாகவும் இரவில் மின் விளக்குகளை எரிய வைப்பதால் தூக்கம் கெடுகிறது என்றும் பலர் ரயில்வே வாரியத்துக்கு அளித்துள்ள புகாரின் அடிப்படையில் இந்த புதிய விதிகள் அமல் படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரயிலில் பயணம் செய்யும் போது இரவு 10 மணிக்கு மேல் மொபைலில் சத்தமாக பேசினாலோ அல்லது பாடல்களை அருகில் உள்ளவர்களுக்கு தொந்தரவு செய்யும் வகையில் சத்தமாக கேட்டாலோ அந்த பயணிகள் மீது புகார் அளிக்கலாம் என்றும் அந்த புகாரை உடனடியாக தீர்க்கும் பொறுப்பு அந்த ரயிலில் உள்ள ரயில்வே ஊழியருக்கு உண்டு என்றும் ரயில்வே துறை புதிய விதியை அமல் படுத்தி உள்ளது.

இந்த விதி காரணமாக ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் கூடுதல் நிம்மதியாக பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?