Connect with us

இந்தியா

முழுக்க முழுக்க பாதுகாப்பான மொபைல் OS: சென்னை ஐஐடி சாதனை!

Published

on

முழுக்க முழுக்க பாதுகாப்பான மொபைல் இயங்குதளம் ஒன்றை சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ளதை அடுத்து மொபைல் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மொபைலில் நாம் பல ரகசிய தகவல்கள் மற்றும் முக்கியமான ஆவணங்களை பார்த்துக் கொண்டிருப்போம். இந்த நிலையில் அவை ஹேக் செய்யப்படாமல் இருப்பதற்காக பாதுகாப்பான ஓஎஸ் என்பது மிகவும் அவசியம். அந்த வகையில் ஏற்கனவே பல பாதுகாப்பான ஓஎஸ் இருந்தாலும் தற்போது சென்னை ஐஐடி தயாரித்துள்ள BharOS என்ற இயங்குதளம் உள்நாட்டிலேயே முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்டது என்பதும் முழுக்க முழுக்க பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

சென்னை ஐஐடியின் இந்த தயாரிப்பு இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் சுமார் 100 கோடி பேர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்றும் BharOS என்று அழைக்கப்படும் இந்த மென்பொருளை எந்த மொபைல் போனில் வேண்டுமானாலும் இன்ஸ்டால் செய்ய முடியும் என்றும் இது பயனர்களுக்கு மிகவும் பாதுகாப்பான சூழலை வழங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரகசிய தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும் போது, முக்கிய தகவல்களை கையாளும்போது தனி உரிமை மற்றும் பாதுகாப்பு தேவைகளை இந்த BharOS வழங்கி வருகிறது என்றும் இந்த ஓஎஸ் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5கொ நெட்வொர்க் மூலம் தனியார் கிளவுட் சேவைகளை கொண்டு இயங்கும் இந்த BharOS தொழில்நுட்பத்தில் மிகவும் மேம்பாடு கொண்டது என்றும் நவீன டெக்னாலஜியை பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் நிதி உதவி மூலம் இந்த இயங்குதளம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இந்தியா மட்டுமின்றி அனைத்து நாடுகளில் உள்ள மொபைல்போன் பயனாளர்களும் இந்த ஓஎஸ்-ஐ பயன்படுத்தி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் முன்னணி ஒஎஸ் நிறுவனங்களுக்கு இணையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த BharOS இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி அவர்கள் கூறிய போது BharOS என்பது அனைத்து மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இயங்குதளம் என்றும், சுதந்திரம், கட்டுப்பாடு, நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதுடன் பயனர்கள் தங்களுக்கு தேவை என கருதும் செயலியாக மேம்படுத்தப்பட்டது என்றும் அதிக கவனம் செலுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஓஎஸ் தனி உரிமையை உறுதிப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் எந்த மாடல் மொபைல் போனிலும் இந்த ஓஎஸ்-ஐ இன்ஸ்டால் செய்யலாம் என்றும் பயனர்கள் தங்களுக்கு அறிமுகம் இல்லாத அல்லது நம்பிக்கை இல்லாத செயலிகளை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு இந்த ஓஎஸ்-ஐ தாராளமாக பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எந்தெந்த செயலிகளை அனுமதிக்கெல்லாம் எந்தெந்த செயலிகளை அனுமதிக்க வேண்டாம் என்பது குறித்த பரிந்துரைகள் இந்த ஓஎஸ் மூலம் பயனர்களுக்கு வழங்கப்படும் என்றும் எந்தெந்த டேட்டாக்களை மட்டுமே டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்பதையும் அறிவுறுத்தும் என்றும் கூறப்படுகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?