தமிழ்நாடு
இந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தால் என் பதவியை இராஜினாமா செய்வேன்: அண்ணாமலை ஆவேசப் பேச்சு!

தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்களின் கூட்டம் சென்னையில் உள்ள அமைந்தகரையில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். அமைப்பின் பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், கட்சிக்கு நிதி வசூலிப்பது பற்றியும் பேசினார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு கருத்து ஒனறை தெரிவித்தார்.
இராஜினாமா
அண்ணாமலை பேசுகையில், தமிழ்நாட்டில் நாம் தனித்து நின்றால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி முடிவை எடுத்தால், தலைவர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, சாதாரணத் தொண்டனாக மக்களோடு மக்களாக இருப்பேன். பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திப்பதற்கு நேரம் கேட்டிருக்கிறேன்.
பரபரப்பு
தலைவர் அண்ணாமலையின் பேச்சைக் கேட்டதும், கூட்டத்தில் இருந்த மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, உங்களுடைய பேச்சு தெளிவாக இல்லை. ஆகையால், விளக்கமாக கூறுங்கள் என்றார். இதனைத் தொடர்ந்து, மதுரையைச் சேர்ந்த ஷா என்ற கட்சி நிர்வாகி நாராயணன் திருப்பதியின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தார். அதே நேரத்தில் பலரும் அண்ணாமலையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர. இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு பரபரப்பானது.
இதன் பிறகு, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., நம் கட்சியின் மைய குழுவில் பேச வேண்டிய கருத்தினை ஏன் இப்போது பேசுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். இதனால் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்கள் கூட்டத்தில்