Connect with us

தமிழ்நாடு

கோடைகாலத்தில் இனி இந்தப் பிரச்சனையே இருக்காது: குட் நியூஸ் சொன்ன தமிழக மின்துறை அமைச்சர்!

Published

on

பொதுவாக கோடைகாலத்தில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகள் என்றால் வெயிலும், மின்வெட்டும் தான். வெயில் தகித்துக் கொண்டிருக்கும் போது, மின்வெட்டு ஏற்பட்டால் வியர்வையில் நனைந்து விடுவோம். ஆனால், இந்த ஆண்டு இந்தப் பிரச்சனையே இருக்காது என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நற்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோடைகால மின்தேவை

கோடை காலத்தில் மின்தேவை அதிகரித்தாலும், அதனை சமாளிக்க தமிழக மின்வாரியம் தயார் நிலையில் உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த வருடம் மார்ச் 2022 இல் 17,196 மெகாவாட் அளவாக இருந்த மின்தேவை, நடப்பாண்டு 2023 மார்ச் மாதத்தில் 18,053 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது. அடுத்து வரும் ஏப்ரல் மாதத்தில் மின்தேவை 18,500 மெகாவாட் அளவாக உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சர் கூறினார்.

ஸ்மாட் மீட்டர்

தமிழ்நாட்டில் இன்னமும் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவதற்கான ஒப்பந்தப் புள்ளி விரைவில் கோரப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் இலவசமாக வழங்கப்படும். நவீன தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட் மீட்டர்கள் உருவாக்கப்படுவதன் காரணத்தால், மின் இழப்புக்கு வாய்ப்பே இல்லை என்றார்.

மின்சார சார்ஜிங் நிலையங்கள்

தமிழக மின்வாரியத்திற்கு சொந்தமான 100 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கான பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வருகின்ற ஏப்ரல் மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?