தமிழ்நாடு
வாக்குவாதம் செய்து தடுத்த எஸ்பி: வழக்கு தொடர்வாரா பொன்னார்!

தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐய்யபன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றார். அப்போது அவரது காரை தடுத்து நிறுத்தி அவரது காரில் செல்ல அனுமதி மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார் நிலக்கல் மாவட்ட காவல்துறை எஸ்பி.
இதனையடுத்து அமைச்சர் பொன்னார் மற்றும் அவருடன் சென்ற பாஜகவினர் அந்த எஸ்பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் எவ்வளவு எடுத்துக்கூறியும் அந்த அதிகாரி அவரை தனது சொந்த காரில் செல்ல அனுமதிக்கவில்லை. இதனையடுத்து பொன்.ராதாகிருஷ்ணன் பக்தர்கள் செல்லும் அரசு பேருந்தில் சென்று ஐய்யப்பனை வழிபட்டுவிட்டு வந்தார். அப்போது அவர் அழுதுகொண்டே ஐயப்பனை வணங்கினார்.
இது அரசியல் வட்டாரத்திலும், தேசிய மற்றும் இரு மாநில ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது. சமூக வலைதளங்களிலும் இந்த சம்பவம் கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், தன்னைத் தடுத்த கேரள எஸ்பிஐயின் உடல்மொழி வேறுவிதமாக இருந்தது. அவர் மீது வழக்கு தொடுப்பது பற்றி யோசித்து முடிவெடுப்பதாக தெரிவித்தார்.
மேலும் அந்த அதிகாரி தன்னிடம் பேசும்போது, அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். அதற்கு நான் எங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்று கேட்கும் பொழுது நீங்கள் செல்லும் வழியில் பாருங்கள் தெரியும் என்று கூறினார். அதன்பின் நிலச்சரிவினால் பிரச்சனைக்கு வந்தால் நீங்கள் பார்த்து கொள்வீர்களா? என்று வேறு விதமான உடல் மொழியில் கேட்டார். அதற்கு நான் இப்படி பேசலாமா என கேட்டார். இதுதான் அங்கு நடந்தது என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.
















