Connect with us

தமிழ்நாடு

ஓபிஎஸ், பொன்னார் கார் முற்றுகை: புயல் பாதித்த மக்கள் ஆவேசம்!

Published

on

தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. இன்னமும் இயல்பு வாழ்க்கை திரும்பாமல் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மின்சாரம், குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காததால் மக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.

எந்தவித நிவாரணங்களும் சென்றடையாததால் அங்கு வரும் அதிகாரிகளையும், அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் மக்கள் முற்றுகையிட்டு கேள்வி மேல் கேள்வி கேட்ட திணறடிக்கின்றனர். இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரது காரை முற்றுகையிட்டு முறையிட்டனர்.

துணை முதல்வர் ஓபிஎஸ் கந்தர்வக்கோட்டை பகுதியில் ஆய்வு செய்தபோது அவரது காரை முற்றுகையிட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதேபோல மன்னார்குடி 33-வது வார்டில் வந்த மத்திய அமைச்சர் பொன்னாரின் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு புதிய மின்கம்பங்கள் இன்னும் வரவில்லை, இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை. உடனே மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர். மின்கம்பங்களை அனுப்பி வைக்க பரிந்துரைக்கிறேன் என்று உறுதியளித்த பின்னர் தான் பொதுமக்கள் அவரது காருக்கு வழிவிட்டனர்.

வணிகம்5 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?