Connect with us

சினிமா செய்திகள்

கனத்த மனதுடன்‌ பிக்பாஸில் இருந்து விலகுகிறேன்: கமல்ஹாசன் அறிக்கை!

Published

on

kamal

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து ஏற்கனவே கமல்ஹாசன் விலக இருப்பதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுகிறேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

கோவிட்‌ பெருந்தொற்றுப்‌ பரவலும்‌ அதனையடுத்து வந்த லாக்டவுன் விதிமுறைகளும்‌ ஒவ்வொருவரின்‌ அன்றாடத்திலும்‌, திட்டங்களிலும்‌ பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. விக்ரம்‌ திரைப்படத்தின்‌ படப்பிடிப்பும்‌, பிற தயாரிப்புப்‌ பணிகளும்‌ இதற்கு விதிவிலக்கல்ல.

பிக்பாஸ்‌ நிகழ்ச்சி என்‌ மனதிற்கு உகந்த, நான்‌ விரும்பிச்‌ செய்கிற ஒன்று.விக்ரம்‌ பணிகள்‌ பிக்பாஸ்‌ நிகழ்ச்சிக்கு எவ்விதமான பாதிப்பையும்‌ ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகப்‌ பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் திட்டமிட்டு செயல்பட்டு வந்தோம்‌. கோவிட்‌ பெருந்தொற்று என்னையும்‌ தாக்கியபோது, மருத்துவமனையிலிருந்து கூட போட்டியாளர்களையும்‌, ரசிகர்களையும்‌ சந்தித்தேன்‌. குணமடைந்த மறுநாளே நிகழ்ச்சியைத்‌ தொடர்ந்தேன்‌. பிக்பாஸ்‌ சீசன்‌ 5 வழக்கம்போல சிறப்பான முறையில்‌ நடந்து முடிந்தது.

இந்த நிகழ்ச்சி‌ முதன்முறையாக தமிழில்‌ ஓடிடியில்‌ டிஜிட்டல்‌ அவதாரம்‌ எடுத்தபோது அந்த மாற்றத்தை வரவேற்று முன்னெடுக்கும்‌ பெருமை எனக்குக்‌ கிடைத்தது. புதிய புதிய தொழில்நுட்பங்களை வரவேற்க வேண்டும்‌, மக்களை மகிழ்விக்கக்‌ கிடைக்கும்‌ எந்தச்‌ சிறிய வாய்ப்பையும்‌ தவறவிடக்கூடாது எனும்‌ என்‌ உத்வேகத்திற்குப்‌ பிக்பாஸ்‌ அல்டிமேட்‌ ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. அவ்வகையில்‌ டிஸ்னி ப்ளஸ்‌ ஹாட்‌ ஸ்டார்‌ புரட்சிகரமான மாற்றத்தை நிகழ்த்தி இருக்கிறது. இவர்களோடு இணைந்து புதுமைப்‌ பாதையில்‌ பயணிப்பதில்‌ எனக்கு அளவற்ற பெருமிதம்‌ உண்டு.

லாக்டவுன்‌ விதிமுறைகளால்‌ விக்ரம்‌ திரைப்படத்தின்‌ படப்பிடிப்பு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இதன்‌ விளைவாக, பிக்பாஸ்‌ அல்டிமேட்‌ நிகழ்ச்சிக்கு என நான்‌ ஒதுக்கியிருந்த தேதிகளும்‌, விக்ரம்‌ படப்பிடிப்பு தேதிகளிலும்‌ மாற்றங்கள்‌ செய்ய வேண்டியதாகிவிட்டது. இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி வரும்‌ சூழலில்‌ என்னோடு பணியாற்றும்‌ பிற முக்கியமான நடிகர்கள்‌, தொழில்நுட்பக்‌ கலைஞர்களுடைய தேதிகளையும்‌ மாற்றியமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதால்‌, பிக்பாஸ்‌ அல்டிமேட்‌ மற்றும்‌ விக்ரம்‌ இரண்டையும்‌ ஒரே நேரத்தில்‌ மேற்கொள்ள முடியாத சூழல்‌ உருவாகிவிட்டது.

இந்திய சினிமாவின்‌ மிக முக்கியமான நடிகர்களையும்‌, கலைஞர்களையும்‌, தொழில்நுட்ப வல்லுனர்களையும்‌ என்‌ சொந்தக்‌ காரணங்களின்‌ பொருட்டு தாமதிக்கச்‌ செய்வது நியாயமல்ல. அவர்கள்‌ ஒப்புக்கொண்ட பணிகள்‌ அவர்களுக்காகக்‌ காத்திருக்‌குன்றன. ஆகவே, வேறு வழியின்றி கனத்த மனதுடன்‌ வருகிற பிப்ரவரி 20-ஆம்‌ தேதி எபிஸோட்டுக்குப்‌ பிறகு டிஸ்னி ப்ளஸ்‌ ஹாட்ஸ்டாரில்‌ ஒளிபரப்பாகி வரும்‌ பிக்பாஸ்‌ அல்டிமேட்‌ நிகழ்ச்சியிலிருந்து விலகிக்கொள்வது என்ற முடிவை எடுக்க நேர்ந்துவிட்டது. தமிழில்‌ பிக்பாஸ்‌ நிகழ்ச்‌சி அறிமுகமான நாள்தொட்டு அதன்‌ அங்கமாக இருந்து ரசிகர்களைச்‌ சந்தித்து உரையாடி வந்த எனக்கு இது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

இந்த முடிவை எடுப்பதில்‌ விஜய்‌ தொலைக்காட்சியின்‌ நிர்வாகம்‌ மிகச்சிறந்த முறையில்‌ என்னோடு ஒத்துழைத்தார்கள்‌. இந்த இக்கட்டான தருணத்தில்‌ டிஸ்னி ப்ளஸ்‌ ஹாட்ஸ்டார்‌ மற்றும்‌ விஜய்‌ டிவி நிர்வாகம்‌ எனக்களிக்கும்‌ அன்பும்‌ ஆதரவும்‌ என்னை நெகிழ்ச்சியடையச்‌ செய்கின்றன. என்னுடைய விலகல்‌ ஏற்படுத்தும்‌ சிரமங்களுக்காக அவர்களிடமும்‌ வருத்தம்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.

இது மிகச்‌சிறிய, தற்காலிக இடைவெளிதான்‌. மிக விரைவில்‌ பிக்பாஸ்‌ சீசன்‌ 6-ல்‌ உங்களை மீண்டும்‌ சந்திக்கிறேன்‌. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?